• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜகவை பற்றி அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

September 8, 2020 தண்டோரா குழு

முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பாஜகவை பற்றி அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் வசந்தராஜன் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கோவையை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் பாஜகவை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மூதாட்டியின் வீட்டை ஏமாற்றி கையெக்கப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் ஆறுமுகம் என்பவர் பாஜகவை சார்ந்தவர் இல்லை என்றும், பாஜகவில் இருப்பதால் தான் காவல்துறை கைது செய்யப்படவில்லை என பொய்யாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாகவும்,மேலும் பாஜகவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருவதாகவும், சிலம்பரசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க