• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட வேண்டும் – கவுதம் பம்பவாலே

February 11, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட வேண்டும் என இந்தியா விரும்புகிறது என்று இந்திய தூதரக அதிகாரி கவுதம் பம்பவாலே தெரிவித்துள்ளார்.

8-வது கராச்சி இலக்கிய விழாவை பாகிஸ்தான் மாநிலம் காரச்சியில் திறந்து வைத்து அவர் கூறியதாவது:

“பாகிஸ்தான் தன் தேசத்தை காக்க எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மனமார பாராட்டுகிறது. பாக்கிஸ்தான் தனது அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகளுடன் அமைதியை பின்பற்ற வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

இந்த ஆண்டு பாகிஸ்தான் தனது 7௦-வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பட்டு தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

இந்த விழாவிற்கு இந்தியாவை சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு இருப்பதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க