February 26, 2019 தண்டோரா குழு
பாகிஸ்தானில் இந்திய சினிமாக்கள், விளம்பரங்களுக்கு தடை விதித்து உத்தரவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்.14-ம் தேதி நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லையில் செயல்பட்டுவந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டுவீசி தகர்த்தெறிந்தது. இதில் 200 முதல் 300 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பாகிஸ்தான் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் திரையிடப்படாது என அந்நாட்டு அந்நாட்டு தகவல் தொடர்பு துறை அமைச்சர் சவுதாரி பாவத் ஹூசைன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா சம்பந்தப்பட்ட விளம்பரங்களும் வெளியிட பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.