• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனைக்கான ‘ஃபோக்ஸ்வேகன் சர்டிபைடு ப்ரீ-ஓன்டு’ ஷோரூம் கோவையில் திறப்பு

July 4, 2024 தண்டோரா குழு

பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனைக்கான ‘தாஸ் வெல்ட் ஆட்டோ’ என்னும் பெயரில் உள்ள நிறுவனத்தை ‘ஃபோக்ஸ்வேகன் சர்டிபைடு ப்ரீ-ஓன்டு’என பெயர் மாற்றம் செய்து தனது முதல் ஷோரூமை கோவையில் ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் திறந்துள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ரமணி ஃபோக்ஸ்வேகன் கார் ஷோரூமில் நடைபெற்ற திறப்பு விழாவில் ஃபோக்ஸ்வேகன் சர்டிபைடு ப்ரீ-ஓன்டு’ ஷோரூமை ஃபோக்ஸ்வேகன் பாசஞ்சர் கார்ஸ் இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் ஆஷிஷ் குப்தா திறந்து வைத்தார். ரமணி ஃபோக்ஸ்வேகன் குழும நிர்வாக இயக்குனர் சுதர்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து போக்ஸ்வேகன் பாசஞ்சர் கார்ஸ் இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் ஆஷிஷ் குப்தா கூறுகையில்,

இந்த புதிய ஷோரூமில் பல்வேறு நிறுவனங்களின் கார்கள் இடம் பெற்று இருப்பதோடு,பயன்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் மாடல்களுக்கு இது முக்கியத்துவம் அளிக்கிறது. இங்கு விற்பனை செய்யப்படும் கார்களுக்கு தேவைப்படும் நிலையில் அவற்றை புதுப்பித்தல், சான்றிதழ் மற்றும் உத்தரவாதங்களை வழங்குகிறது. இந்த பெயர் மாற்றத்தின் மூலம் இந்த துறையில் தனித்து நிற்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சேவைகளை வழங்க இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர, சான்றளிக்கப்பட்ட கார்களை வழங்கி, பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கையை இந்நிறுவனம் மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக ஆட்டோபெஸ்ட் மெகா எக்ஸ்சேஞ்ச் மேளா 2024ஐ ஜூலை 3-ந்தேதி முதல் ஜூலை 20-ந்தேதி வரை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது என்றார்.

மேலும் படிக்க