• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக நடிகர்கள் ராமராஜன்,தியாகு

February 12, 2017 தண்டோரா குழு

தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக நடிகர்கள் ராமராஜன், தியாகு, அருண்பாண்டியன் (முன்னாள் எம்.எல்.ஏ.) ஆகியோர் ஞாயிற்றுகிழமை நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளனர்.

தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அளித்து ராமராஜன் பேசியதாவது:

ஒரு முறை அல்ல. இரண்டாவது முறை, மூன்றாவதுவது முறையல்ல. நான்காவது முறையும் பன்னீர்செல்வம் முதல்ராவார். ஜெயலலிதாவினால் அடையாளம் காணப்பட்டவரும் அவருக்கு பெருமை சேர்க்க கூடியவர் . காமராஜரின் எளிமை, அண்ணாவின் அறிவு, ஜெயலலிதாவின் துணிவு அனைத்தும் அடங்கியவர்.மக்கள் விரும்பியதால் ஓ.பி.எஸ். அணியில் இணைந்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் தியாகு பேசியதாவது

பன்னீர்செல்வம் எளிமையான மனிதர். அனைவரையும் அரவணைத்து பேசுவார். உழைப்பால் உயர்ந்தவர். மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடியவர். தொண்டர்களும், மக்களும் உங்கள் பின்னால் உள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அருண் பாண்டியன் பேசியதாவது:

நான் முதல் நாளே பன்னீர்செல்வத்தை பார்த்துவிட்டேன். தமிழர்களின் மானத்தையும், கௌரவத்தையும் காப்பாற்றி விட்டீர்கள் என அப்போதே கூறினேன். அங்கு கூட்டமில்லை. இங்கு சாதாரணமான கூட்டம் அல்ல. பிரியாணிக்காக வந்த கூட்டமல்ல. நாங்களும், அனைத்து இளைஞர்களும் உங்கள் பின்னால் உள்ளோம் .

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க