• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பதிவுரை எழுத்தர் நிலையான ஊதியம் வழங்குவதற்கான அரசாணை விரைவில் வழங்கப்படும் – எஸ்.பி.வேலுமணி

October 19, 2018 தண்டோரா குழு

பதிவுரை எழுத்தர் நிலையான ஊதியம் வழங்குவதற்கான அரசாணை விரைவில் வழங்கப்படும் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்தாக ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த உள்ளாச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.பின்னர் தங்களது நீண்ட நாள் கோரிக்கையான ஊரக வளர்ச்சிதுறை பதிவுரை எழுத்தருக்கு நிலையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுள்ள தமிழக அரசு விரைவில் அதற்கான அரசாணை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்தது அவர்களது கோரிக்கையை ஏற்ற அமைச்சர் விரைவில் அரசாணை வழங்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் படிக்க