October 19, 2018
தண்டோரா குழு
பதிவுரை எழுத்தர் நிலையான ஊதியம் வழங்குவதற்கான அரசாணை விரைவில் வழங்கப்படும் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்தாக ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த உள்ளாச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.பின்னர் தங்களது நீண்ட நாள் கோரிக்கையான ஊரக வளர்ச்சிதுறை பதிவுரை எழுத்தருக்கு நிலையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுள்ள தமிழக அரசு விரைவில் அதற்கான அரசாணை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்தது அவர்களது கோரிக்கையை ஏற்ற அமைச்சர் விரைவில் அரசாணை வழங்கப்படும் என உறுதியளித்தார்.