• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

படிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் ஒரு மாணவனாக நீங்கள் செயல் பட வேண்டும் – சைலேந்திரபாபு

August 2, 2019

கோவை பி எஸ் ஜி கல்லூரியின் மாணவர்களிடையே சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் தன்னம்பிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஇ படிக்கும் மாணவ மணவிகளுடைய தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சைலேந்திரபாபு ஐபிஎஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மாணவர்கள் அறிவுத்திறனை காண்பதற்காக உலக கேள்விகளை எழுப்பினார். இதில் சரியாக பதில் சொல்லும் அளவிற்கு உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த பாராட்டு புத்தகத்தை வழங்கினார்.

மேலும் இவர்களுடைய திறமைகளை மென்மேலும் ஊக்குவிப்பதற்கான வழிகளை எப்படி மேற்கொள்ளவேண்டும் என்றும் படித்த முடித்த பின் உங்கள் மூலம் படிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் ஒரு மாணவனாக நீங்கள் செயல் பட வேண்டும் என்று அவர் கல்லூரி மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க