September 24, 2019
தண்டோரா குழு
பஞ்சாப், டெல்லி, ஜம்மு – காஷ்மீர் மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
பாகிஸ்தான் லாகூரின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு ஆனது. டெல்லியில் நாடாளுமன்றம், பிரஸ் கிளப் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சண்டிகர், நொய்டா, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் லாகூரை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.