• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நோயாளிக்கு அன்பும் ஆதரவாகவும் இருக்கும் நாய்

August 11, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் நாய் ஒன்று நோயால் பாதிக்கப்பட்ட வயதானவருக்கு அன்பையும் ஆதரவையும் தந்து வருகிறது.

அமெரிக்கா வாஷிங்டன்னில் கரோல் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய வீட்டிற்கு நாய் ஒன்று தினமும் அடிக்கடி வந்து சென்றுள்ளது. அது ஏன் என கரோல் கண்காணிக்க தொடங்கினர். அப்போது அந்த நாய், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்க்க வருகிறது என அவருக்கு தெரிய வந்தது.

அந்த நாய், கரோலின் தந்தை அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று, அவர் அருகில் அமர்ந்திருக்கும்.
கரோலின் தந்தை ஒரு விதமான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை யாராவது கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்நிலையில் அந்த நாயின் தின வருகையால் கரோலின் தந்தை மகிழ்ச்சியடைந்துள்ளார். அவர் அதனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்பார். அதன் பிறகு, அதை அன்புடன் தடவிய வண்ணம் அமைதியாக தூங்கி விடுவார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் படிக்க