• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நொய்யல் ஆற்றுப்படுகையில் மணல் திருட்டில் ஈடுப்பட்ட மூன்று பேர் கைது – ஒரு வாகனம் பறிமுதல்

August 3, 2023 தண்டோரா குழு

கோவை ஆலாந்துறை பகுதியில் நொய்யல் ஆற்று படுகையில் அரசு அனுமதி இன்றி மணல் எடுப்பதாக ஆலாந்துறை கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது அங்கு மூன்று பேர் மணல் எடுத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களின் பெயர் கதிர்வேல்,ராபூல் உசேன், நபி உசேன் என்பதும் அனுமதியின்றி மணல் எடுத்து கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து மூவர் மீதும் ஆலாந்துறை காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் சுகுமார் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.மேலும் இந்த மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய ஈச்சர் வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்படுள்ளது.

மேலும் படிக்க