• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – பேரூர் வேடப்பட்டி தற்காலிக சாலை நீரில் மூழ்கியது

August 4, 2020 தண்டோரா குழு

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரூர் வேடப்பட்டி தற்காலிக சாலை நீரில் மூழ்கியது. இதனால் 5 கிலோ மீட்டர் சுற்றி பொதுமக்கள் செல்கின்றனர்.

கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றலாம் அருவி மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நேற்று இரவு பெய்த கனமழையால் சித்திரை சாவடி தடுப்பணை நிரைந்து நொய்யல் ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. ஏற்கனவே பேரூர் படிதுறை அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பேரூர் வேடப்பட்டி சாலையில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அதன் அருகே தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது.தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தற்காலிக சாலை நீரில் மூழ்கியது. இதனால் அவ்வழியாக சென்ற மக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர்.

மேலும் படிக்க