• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நொய்யல் ஆற்றில் நீர் திருட்டை தடுக்க ஆட்சியரிடம் மனு

June 15, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நொய்யல் ஆற்றில் நீர் திருட்டை தடுக்கவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நொய்யல் நதியை தூர்வாரும் பணிகள் அண்மையில் தமிழக அரசு 230 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் நொய்யல் ஆற்றில் நடத்தப்படும் நீர் திருட்டை தடுக்கவும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி,

நீர்நிலைகளை பாதுகாக்க அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும், நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து ஆற்றை பாதுகாக்கவும் அங்கு நடைபெறும் நீர் திருட்டை தடுக்கவும் கோவை மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க