August 21, 2019
தண்டோரா குழு
கோவை வந்த முதல்வரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சார்பாக,கொங்கு மண்டலத்தின் நீராதரமான நொய்யல் ஆற்றை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, கழிவுநீரை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
இன்று கோவை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு ஒன்றை முதல்வரிடம் அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சு.பழனிசாமி தலைமையில் வழங்கப்பட்ட அம்மனுவில், 147கி.மீ., தொலைவில் பயணிக்கும் நொய்யல் ஆறு குடியிருப்புகள், விவசாயி நிலத்தில் செல்வதை மறு சீரமைப்பு செய்யவும், நொய்யல் ஆற்று ஆக்கிரமிப்பை அகற்றிடவும், நகர, ஊராட்சி கழிவுநீர்கள், சாயப்பட்டறை, தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். நொய்யல் ஆறு புனரமைப்புக்கு தமிழக அரசு தனி அலுவலரை நியமிக்க வேண்டும். பால் கொள்முதல் விலை உயர்வு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், விவசாயிகளின் துயரத்தை குறைத்து உள்ளது. என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது