• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வரிடம் மனு

August 21, 2019 தண்டோரா குழு

கோவை வந்த முதல்வரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சார்பாக,கொங்கு மண்டலத்தின் நீராதரமான நொய்யல் ஆற்றை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, கழிவுநீரை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

இன்று கோவை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு ஒன்றை முதல்வரிடம் அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சு.பழனிசாமி தலைமையில் வழங்கப்பட்ட அம்மனுவில், 147கி.மீ., தொலைவில் பயணிக்கும் நொய்யல் ஆறு குடியிருப்புகள், விவசாயி நிலத்தில் செல்வதை மறு சீரமைப்பு செய்யவும், நொய்யல் ஆற்று ஆக்கிரமிப்பை அகற்றிடவும், நகர, ஊராட்சி கழிவுநீர்கள், சாயப்பட்டறை, தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். நொய்யல் ஆறு புனரமைப்புக்கு தமிழக அரசு தனி அலுவலரை நியமிக்க வேண்டும். பால் கொள்முதல் விலை உயர்வு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், விவசாயிகளின் துயரத்தை குறைத்து உள்ளது. என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் படிக்க