• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான கல்விமான்களின் சந்திப்பு

December 6, 2021 தண்டோரா குழு

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான கல்விமான்களின் சந்திப்பு நடைபெற்றது. இருபது கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பா.அனிருதன் வரவேற்புரை நல்கினார்.நேரு கல்வி குழுமத்தின் முதன்மை கல்வி செயலர் முனைவர் P.K கிருஷ்ணகுமார் கல்விமான்களின் சந்திப்பிற்கு வாழ்த்துரை வழங்க இனிதே தொடங்கியது.கல்லூரி முதல்வர்கள் ஒருவரை ஒருவர் சந்திந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகள் குறித்த , நவீன வளர்ச்சிக்கான வழி முறைகள் தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றது. தலைமைப் பண்பு என்பது பொறுப்புகளை தான் மட்டும் சுமப்பதல்ல மற்றவர்களுக்கு பகிர்வதோடு , அவர்களை தலைவர்களாக உருவாக்குகின்ற அரிய முயற்சியாகும். அவ்வகையில் சிறந்த குடிமகன்களாக புரிந்துணர்வு மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த சந்திப்பு நடைபெற்றது.

கல்லூரி முதல்வர்கள் கல்லூரிகளின் வளர்ச்சிக்கான ஒப்பந்தத்தில் உறுதி கையொப்பமிட்டனர். சாரதா கங்காதரன் கல்லூரியின் முதல்வர் முனைவர் K. உதயசூரியன் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் பள்ளி மற்றும் சமூக பணியில் துறை புலமுதன்மையர் முனைவர் மோ.கனகரத்தினம் நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க