• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாகன ஓட்டுநர் 115 வயதில் காலமானார்

February 7, 2017 தண்டோரா குழு

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாகன ஓட்டுநர் கர்னல் நிஜாமுதீன் 115 வயதில் திங்கள்கிழமை (பிப்ரவரி 6) காலமானார்.

19௦1ம் ஆண்டு பிறந்த நிஜாமுதீன், இந்திய சுதந்திர போராட்ட நேதாஜி வீரர் சுபாஷ் சந்திர போஸின் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆஸம்கர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலமானார். அவர் 1943 முதல் 1945 வரையில் நேதாஜியுடன் இருந்தார்.

நிஜாமுதீனுக்கு மனைவி அஜ்புல் நிஷா, மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
நிஜாமுதீன் மறைவு குறித்து பிரதமர் தன்னுடைய இரங்கல் செய்தியில், “நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாகன ஓட்டுநராக இருந்த கர்னல் நிஜாமுதீன், இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வலிமை சேர்த்தார். அவர் தேசத்தின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த சிந்தனை, வீரம், தேசப்பற்று எப்பொழுதும் நம் நினைவில் இருக்கும். அவருடைய இறப்பு மிகுந்த துக்கத்தைத் தருகிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும் படிக்க