• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீலகிரியில் பள்ளிக்குழந்தைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரண்டு முதியவர்கள் கைது

September 12, 2019 தண்டோரா குழு

பந்தலுார் அருகே இரு குழந்தைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, 73 மற்றும் 62 வயதான இருவர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம்,பந்தலுார் அருகே உள்ள அரசு பள்ளியில்,5ம் வகுப்பு படித்து வந்த,இரண்டு குழந்தைகள் கடந்த மே மாதம் பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளனர்.அப்போது, வீட்டின் அருகே குடியிருக்கும் முதியவர்கள் இருவர்,மிட்டாய்,கடலை போன்றவற்றை வாங்கி கொடுத்து,அவர்களிடம் செல்லமாக பேசியுள்ளனர். பின்னர், அருகேயுள்ள புதர் பகுதிக்கு அடிக்கடி அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது’ என, குழந்தைகளை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன குழந்தைகள் இருவரும், வீட்டில் யாரிடமும் தகவலை தெரிவிக்கவில்லை.இந்நிலையில்,குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்,சோர்வடைந்த நிலையில் இருந்த குழந்தைகளிடம் விசாரித்ததில் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து,பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் சம்மந்தப்பட்ட தாசய்யா,62, கிருஷ்ணன்,73,ஆகியோர் மீது’போக்சோ’சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

மேலும் படிக்க