• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘நீட்’ தேர்வை எதிர்த்து சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

January 31, 2017 தண்டோரா குழு

மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர மத்திய அரசு கொண்டு வந்த ‘நீட்’ தேர்வு முறையை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் மருத்துவப் பாடப் பிரிவுகளில் மானவர்கள் சேர ‘நீட்’ தேர்வை (தேசிய தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு) எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் 2௦16 ஆண்டு உத்தரவிட்டது.

இதையடுத்து மத்திய அரசு இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பாடப் பிரிவுகளில் சேர கண்டிப்பாக மாணவர்கள் “நீட்’ தேர்வை எழுத வேண்டும்.

இந்த சட்டத்தை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தன இதனால் உடனடியாக தமிழகத்தில் நீட் தேர்வு முறை அமல்படுத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு 2௦16 ஆம் ஆண்டு பிறப்பித்தது.

இந்நிலையில் ‛நீட்’ தேர்வை நிரந்தரமாக எதிர்த்து, பழைய முறையையே பின்பற்ற சட்டபையில், சட்ட முன்வடிவை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.

இதன் படி பழைய முறைப்படி, பிளஸ் 2 கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை மேற்கொள்ள இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இளம்கலை மற்றும் முதுகலை என இரண்டு வகைகளிலும், பழைய முறைப்படியே மாணவர் சேர்க்கை நடக்கவும் இதில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

‛நீட்’ தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இந்த சட்டமுன்வடிவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க