• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் – மஃபா பாண்டியராஜன்

July 26, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வு விலக்கு தொடர்பான நல்லதொரு அறிவிப்பு நாளை வெளியாகும் என்று மஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.

இந்நிலையில், நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி நீட் தேர்வு விலக்கு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து 2 ஆண்டுகள் விலக்களிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க