• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

August 28, 2020 தண்டோரா குழு

நீட் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் மற்றும் ஜே இ ஈ தேர்வுகள் அறிவிக்கப்பட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது ஆனால் கொரோனாவை கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் நீட் மற்றும் ஜே இ ஈ தோ்வு நடத்துவதைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மணிக்கூண்டு பகுதியில் காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் எம் என் கந்தசாமி பொருளாளர் சௌந்தர்,சாய் சாதிக், திலகவதி, கணபதி சிவகுமார், குருசாமி, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் சமூக இடைவெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க