• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது – காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

June 10, 2019 தண்டோரா குழு

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது இளைஞர்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் அக் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். முன்னதாக பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

நீட் தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. ஏற்கனவே மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பில் அரசு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். அதில் தேர்வாகி வந்த பிறகு மீண்டும் நீட் தேர்வு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் 4 சதவீத மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது மிகவும் குறைந்த சதவீதம் தேர்ச்சி பெறாத மானவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை. ஒரு திட்டம் கொண்டுவருவது என்பது தவறாக கூறமுடியாது. ஆனால், அந்த திட்டம் கொண்டுவந்த பிறகு அது சரியானதாக இல்லாவிட்டால் அதை திரும்ப பெறவேண்டும். இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாதபோது, ஒரே மாதிரியான தேர்வு முறை என்பது பொருந்தாது. தமிழகத்தில் கடுமையான குடிநீர் பிரச்சனை உள்ளது. குடிநீர் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பே தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை ஆழப்படுத்தியிருக்கவேண்டும். நதிநீர் இணைப்பு என்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஒரே மாநிலத்தில் உள்ள நதிகளை இணைப்பது சாத்தியமானது. ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் நதிகளை இணைப்பதில் பிரச்சனைகள் ஏற்படும். அந்த மாநிலங்களில் ஒப்புதலை பெறவது என்பது சிரமமானது. நிதின்கட்கரி நதிகளை இணைப்பு குறித்து பேசிவருகிறார். ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களிடையே பேச்சு நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு நதிகளை இணைத்தால், அவரின் முயற்சி வரவேற்கதக்கது.
அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கவேண்டும். ஆனால், மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது.மும்மொழிக்கொள்கையை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. மொழி உரிமையை பாதுகாக்க நேருவும், இந்திரா காந்தியும் முன்வந்தனர் சாலைகள் மேம்பாட்டிற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்காது ஆனால், சேலம் 8 வழிச்சாலைதிட்டம் முதல்வரின் தனிப்பட்ட விருப்பத்திற்காக நிறைவேற்ற நினைப்பதால்
காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது என்றார்.

மேலும் படிக்க