May 5, 2018
மாணவர்கள் காலை10 மணிக்கு தங்களது ஹால்டிக்கெடுடன் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும்.பிளாஸ்டிக் பை, கால்குலேட்டா், அளவுகோல்,பரிட்சை அட்டை, பெண் டிரைவ், ரப்பா், எலக்ட்ரானிக் பேனா, ஸ்கேனா் எடுத்துச் செல்லக் கூடாது.
மாணவர்கள் மோதிரம், காதணி, மூக்குத்தி, செய்ன், ஹோ் கிளிப், வளையல் உள்ளிட்டவை எடுத்துச் செல்லக் கூடாது.வெற்று அல்லது எழுதி காகிதங்கள், ஜாமென்ட்ரி, பென்சில் பாக்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லக் கூடாது.
கைப்பை, மணிப்பர்ஸ், பெல்ட், தொப்பி, கைக்கடிகாரம், கண்ணாடி, கேமரா, உலோக பொருள்கள், உணவுப் பொருள், தண்ணீா் பாட்டில் போன்றவற்றை செல்போன், ப்ளூடூத், மைக்ரோபோன், பேஜா் எடுத்துச் செல்லக் கூடாது.
சல்வார் மற்றும் பேண்ட் அணிந்து வரவேண்டும். குறைந்த உயரத்திலான செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும். மூடப்பட்ட நிலையில் இருக்கும் காலணிகள், ஷூக்கு அனுமதி கிடையாது.
மேலும், சேலை அணிந்து வரக்கூடாது என்றும்,கலாச்சரம் நம்பிக்கை சார்ந்த ஆடைகளை அணியும் மாணவர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ. விதித்துள்ளது.