• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வில் இந்திய அளவில் 91 வது இடம் பிடித்த கோவை மாணவிக்கு பாராட்டு

October 17, 2020 தண்டோரா குழு

நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சியடைய, மாணவர்கள் மேல்நிலை பள்ளி துவக்கதிலிருந்தே தங்களை தயார் செய்தால் உறுதியாக சாதிக்க முடியும் என கோவையில் நீட் தேர்வில் 700 மதிப்பெண்கள் பெற்ற மாணவி தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் மாணவி தங்கம்.தனியார் பள்ளியில் பயின்று வந்த இவர்,அண்மையில் வெளியான நீட் தேர்வில் 720க்கு 700 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார்.இந்நிலையில் பீளமேடு பகுதியில் உள்ள ஆகாஷ் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் இவருக்கான பாராட்டு விழா நடைபெற்றது. மையத்தின் இயக்குனர் நரேஷ் தலைமையில் நடைபெற்ற இதில்,இதே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிஷன், அவனிஷ், வைபவ் மற்றும் வசந்த் ஆகிய மாணவர்களுக்கும் ஆகாஷ் அகாடமி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

அகில இந்திய அளவில் 91 வது இடம் பிடித்த கோவை மாணவி தங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நீட் கஷ்டமான தேர்வு இல்லை. எனவும், மருத்துவம் பயில விரும்பும் மாணவ,மாணவிகள் தங்களை இந்த தேர்வுக்கென தயார் படுத்தினால் தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும் என தெரிவித்தார். மேலும்இணைதளத்தில் நிறைய பாடக்குறிப்புகள் உள்ளன. அதனை வைத்து படித்தாலே நிறைய மதிப்பெண்கள் எடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க