• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட்- கருணை மதிப்பெண் விவகாரத்தில் சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

July 16, 2018 தண்டோரா குழு

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ,உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்,உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில்,”நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதியபோது,அதில் 49 வினா-விடைகள் தவறாக இருந்தன.இதனால் 196 மதிப்பெண் குறைவாக கிடைப்பதால்,தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே,மாணவர்களின் நலன் கருதி தவறான 49 வினா-விடைகளுக்குரிய 196 மதிப்பெண்களை வழங்கவும்,நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம்,இந்த வழக்கில் 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க உத்திரவிட்டது.மேலும்,எம்பிபிஎஸ் படிப்பில் சேர புதிய தரவரிசை பட்டியலை 2 வாரத்தில் வெளியிட வேண்டும் என CBSE-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.அதைப்போல் புதிய தர வரிசை பட்டியலை வெளியிடும் வரை MBBS கவுன்சிலிடிங்கை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை ரத்து செய்யுமாறு சிபிஎஸ்இ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.அந்த மனுவில்,முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில்,மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே,உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும்,2ம் கட்ட கலந்தாய்வை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க