• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம்

March 12, 2022 தண்டோரா குழு

நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு வசதியாக தேசிய சட்ட பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் நடைபெற்றது.

கோவை நீதிமன்றம் முதன்மை மாவட்ட நீதிபதி சக்திவேல்,சிபிஐ நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ்,5வது கூடுதல் மாவட்ட நீதிபதி ராமகிருஷ்ணன், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் கிரிஷ்ணபிரியா மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர் எம்.எஸ் ரமணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், உரிமையியல் வழக்குகள், குடும்ப பிரச்சினை குறித்த வழக்குகள்,தொழிலாளர் பிரச்சினை குறித்த வழக்குகள்,சமரச குற்ற வழக்குகள்
தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.

இதன் மூலம் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய இயலாது. அதுபோல் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு ஏற்கனவே செலுத்தியுள்ள நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.இதனால் வழக்கு தரப்பினர்கள் நீதிமன்றங்களுக்கு வருவதால் ஏற்படும் கால விரயம் மற்றும் பண செலவை தவிர்க்கலாம்.
இது தவிர நீதிமன்றத்தில் இல்லாத வழக்குகளையும் கொடுக்கலாம் இங்கு இரு தரப்பினரும் பேசி வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க