• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிலச்சரிவால் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடல்

February 21, 2017 தண்டோரா குழு

ஸ்ரீநகரில் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது.

காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் உள்ள சில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை (பிப்ரவை 21) மூடப்பட்டுள்ளது. இந்த சாலையில் எல்லா வானிலையிலும் பயணம் செய்ய முடியும்.

போக்குவரத்துக் கட்டுபாட்டு அறை அதிகாரி கூறுகையில், “சில இடங்களில் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை அகற்ற ஆண்களும் இயந்திரங்களும் ஈடுப்பட்டுள்ளனர். போக்குவரத்திற்காக நாளை முதல் சாலைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

திங்கள்கிழமை ஏற்பட்ட மலை காரணமாக 3௦௦ கிலோமீட்டர் தூரம் உள்ள நெடுஞ்சாலையிலும் மற்றும் ஸ்ரீநகரில் உள்ள ரம்பன் பந்தல் பகுதிகளுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிப்ரவரி 17-ம் தேதி முதல் திங்கள்கிழமை இரவு வரை விட்டு விட்டு மலை பெய்தது.

வானிலை ஆராய்ச்சி துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

“ஒரே இரவில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து இடங்களிலும் மழை பெய்தது. பெஹல்காம் என்னும் இடத்தில் 2௦ சென்டிமீட்டர் புதிய பனிப்பொழிவு ஏற்பட்டது. காஷ்மீர் மற்றும் லடக் பகுதியில் இரவு வெப்பநிலை குறைந்து இருந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடைகால தலைநகராக விளங்கும் காஷ்மீரில் குறைந்த வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 5.8 டிகிரி செல்சியஸ் இருந்தது.

காஷ்மீரின் நுழைவாயில் நகரமான கஜிகுந்த் நகரில் குறைந்த அளவு வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதன் அருகில் உள்ள கொகேர்நாக் நகரில் மைனஸ் ௦.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. அதே போல் வட காஷ்மீரில் உள்ள குப்வாரா என்னும் இடத்தில் 2 டிகிரி ஆக பதிவாகியுள்ளது. தென் காஷ்மீரில் உள்ள பிரபல ரிசார்ட் பெஹல்காமில் இரவு வெப்பநிலை ௦.2 டிகிரி செல்சியஸ் ஆகவும் பனிசறுக்கிற்கு பிரபலமான குல்மார்க் ரிசார்டில் மைனஸ் 3.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே நகரம் தான் மிகவும் குளிரான நகரமாக காணப்பட்டது. அங்கு மைனஸ் 6.7 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதன் அருகில் உள்ள கார்கில் மைனஸ் 5.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.

காஷ்மீரில் உள்ள உயர் இடங்களில் செவ்வாய்க்கிழமை லேசான மலை அல்லது பனி பெய்யக்கூடும். அதன்பிறகு வானிலை உலர்ந்து இருக்க வாய்ப்பு உண்டு”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க