• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் சந்தானம் குழுவுக்கு மேலும் 2 வாரம் அவகாசம்

April 30, 2018 தண்டோரா குழு

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சந்தானம் குழுவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேலும் 2 வாரம் அவகாசம் அளித்தார்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக பேராசிரியை நிர்மலா தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான சந்தானம் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில், சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நடத்திய விசாரணையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலிலேயே மாணவிகளிடம் பேசியதாக நிர்மலாதேவி தெரிவித்திருந்தார். இதையடுத்து, இருவரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

அதேபோல் மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர், அதிகாரிகள் மற்றும் சிறையில் உள்ள நிர்மலா தேவி ஆகியோரிடம் சந்தானம் குழு விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் இன்றுடன் முடிந்த நிலையில், சந்தானம் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க