• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிர்பயா பாலியல் கொலை வழக்கு: குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

July 9, 2018 தண்டோரா குழு

நிர்பயா பாலியல் கொலை வழக்கில் 4 பேரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்.படுகாயம் அடைந்த அந்தப்பெண் 13 நாள்கள் சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தார்.நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதில் ஒருவன்,சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான்.முக்கிய குற்றவாளி ராம்சிங்,திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.முகேஷ்,பவன்குமார்,வினய்,அக்ஷய் ஆகியோருக்கு டில்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இந்நிலையில் முகேஷ்,பவன்,வினய் ஆகியோர் மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.இம்மனுக்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது,மனுதாரர்கள் கோரிக்கையை ஏற்க கூடிய முகாந்திரம் ஏதுமில்லை என்று மனுவை தள்ளுபடிய செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த தீர்ப்பு குறித்து நிர்பயாவின் தாய் ஆஷாதேவி கூறும்போது,

தற்போது நீதி கிடைத்துள்ளது.எங்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை.குற்றவாளிகளை தூக்கில் போடும் இறுதி நாள் வரை போராடுவோம் என கூறினார்.

மேலும் படிக்க