July 9, 2018 தண்டோரா குழு
நிர்பயா பாலியல் கொலை வழக்கை திறம்பட கையாண்ட டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் மற்றும் அவரது திறமையான சகாக்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
“நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கில் இறுதியில் நீதி வென்றுள்ளது.இதுபோன்ற அரிதினும் அரிதான வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்த வழக்கைத் திறம்படக் கையாண்ட அப்போதைய டெல்லி போலீஸ் கமிஷனர் திரு நீரஜ் குமார் மற்றும் அவரது திறமையான சகாக்களுக்கு நன்றி.நீதித்துறை மற்றும் காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்றுவிக்க இது மிகச் சிறந்த வழக்காகும்” எனக் கூறியுள்ளார்.