• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

March 23, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 648 ரூபாய் சம்பளம் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 412 ரூபாய் மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் வழங்குவதாகவும் அதேபோல் பேரூராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 529 ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 475 ரூபாய் மட்டுமே வழங்குவதாகவும் எனவே நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி பேரூராட்சிகளில் பணிபுரியும் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளைப் புறக்கணித்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் எடுக்கப்படாமல் தேங்கியுள்ளது.

முற்றுகை போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பிற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே சமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் 50க்கும் மேற்பட்ட போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க