• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிம்மதியாக உறங்குவது எப்படி? தலாய் லாமாவிடம் ஸ்மித் கேள்வி

March 25, 2017 தண்டோரா குழு

தரம்சாலாவில் உள்ள ஆஸ்திரேலிய அணியினர் திபெத்திய பெளத்ததுறவி தலாய் லாமாவைச் சந்தித்து ஆசி பெற்றனர்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
ஹிமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியினர் திபெத்திய பெளத்த துறவி தலாய் லாமாவைச் வெள்ளியன்று சந்தித்தனர்.

இச்சந்திப்பு குறித்து கேப்டன் ஸ்மித் கூறும்போது,

“இது மிக அருமை. நான் அவரிடம் நிம்மதியான உறக்கம் பற்றியும் அதற்கு அவர் எப்படி எனக்கு உதவ முடியும் என்று கேட்டேன், அவர் என்னை ஆசீர்வதித்தார்.திபெத்திய கலாச்சாரத்தின் படி நானும் அவரும் ஒருவரையொருவர் மூக்கால் உரசிக் கொண்டோம், அவர் எனக்கு தன் ஆசிகளை வழங்கினார். இது எனக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கான நிம்மதியான உறக்கத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.

மேலும், எங்கள் அனைவருக்குமே இது ஒரு அபூர்வ அனுபவமாக அமைந்தது, அவரிடமிருந்து ஏதாவது கற்றுக் கொள்ள முடியும் என்றால், கடினமான கிரிக்கெட் ஆட்டத்தில் நாங்கள் சில வேளைகளில் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்களாக மாறிவிடுவது தடுக்கப்படலாம். இவ்வாறு கூறினார் ஸ்மித்.

ஏற்கெனவே 2013-ல் இங்கிலாந்து தொடரின் போது தலாய்லாமாவை ஆஸ்திரேலிய அணியினர் சந்திக்க முயன்றனர் ஆனால் அப்போது முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க