August 16, 2018
தண்டோரா குழு
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நாளை(ஆக.,17) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இதற்கிடையில் வந்தார். வாஜ்பாயின் உடல் நிலை நேற்று மோசமடைந்தது. இந்நிலையில், இன்று மாலை 5.05 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நாளை(ஆக.,17) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக டில்லி விஜய்காட் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பா.ஜ. தலைமை அலுவலகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வாஜ்பாய் உடல் கொண்டுவரப்பட உள்ளது.