March 22, 2019 தண்டோரா குழு
திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நாடு முழுவதும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் இரண்டாம் கட்ட தேர்தல் தமிழகம் புதுச்சேரி என 4௦ தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பொன்மாந்துரை கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதியடைந்து வருகிறார்கள். தொகுதி மக்களின் பிரச்னைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.