• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நான் இனி உங்கள் சொத்து என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் – கமல்ஹாசன்

February 22, 2019 தண்டோரா குழு

நான் இனி உங்கள் சொத்து என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் நீதி மய்யம்
கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,

” நான் இனி உங்கள் சொத்து. என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள். மக்கள் வாக்களிக்கும் போது மனம் மாறாமல் நாட்டை பற்றி சிந்தித்துக்கொள்ள வேண்டும். மக்களாகிய நீங்கள் முதலாளி என்று எண்ணுங்கள். நான் உள்பட அனைவரும் உங்களுக்கு வேலைக்காரா்கள் தான். நாட்டின் பிரதமா் என்பதை தோ்வு செய்யும் பெரும் பங்கு தமிழா்களுக்கு உள்ளது.

குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப்போயுள்ளது. குடும்ப அரசியல், வாரிசு அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும். எனக்கும் குடும்பம் உள்ளது. ஆனால் எனது குடும்பம் சற்று பெரியது. அதில் 8 கோடி மக்கள் உள்ளனா்” என்று இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க