February 22, 2019
தண்டோரா குழு
நான் இனி உங்கள் சொத்து என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் நீதி மய்யம்
கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
” நான் இனி உங்கள் சொத்து. என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள். மக்கள் வாக்களிக்கும் போது மனம் மாறாமல் நாட்டை பற்றி சிந்தித்துக்கொள்ள வேண்டும். மக்களாகிய நீங்கள் முதலாளி என்று எண்ணுங்கள். நான் உள்பட அனைவரும் உங்களுக்கு வேலைக்காரா்கள் தான். நாட்டின் பிரதமா் என்பதை தோ்வு செய்யும் பெரும் பங்கு தமிழா்களுக்கு உள்ளது.
குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப்போயுள்ளது. குடும்ப அரசியல், வாரிசு அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும். எனக்கும் குடும்பம் உள்ளது. ஆனால் எனது குடும்பம் சற்று பெரியது. அதில் 8 கோடி மக்கள் உள்ளனா்” என்று இவ்வாறு அவர் கூறியுள்ளார்.