• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

April 22, 2019 தண்டோரா குழு

நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்த நிலையில் காலியாக உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்மே 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர்களை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் இன்று அறிவித்தார்.

அரவக்குறிச்சி தொகுதியில் – சாகுல் ஹமீது

சூலூர் தொகுதியில் – சுகுமார்

ஒட்டப்பிடாரம் தொகுதியில்- சுந்தர்ராஜன்

திருப்பரங்குன்றம் தொகுதியில் – மகேந்திரன்

மேலும் படிக்க