• Download mobile app
11 Jun 2026, ThursdayEdition - 3774
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டு எருமைகளாக மாறிவரும் காட்டெருமைகள்(Bison).

March 4, 2016 வெங்கி சதீஷ்

இந்திய அளவில் வன விலங்குகளின் மீதான வன்முறை மற்றும் அவற்றைக் கொலை செய்வதைத் தடுக்கும் சட்டம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதை அடுத்து வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மிகக் குறைவான உயரம் உள்ள மலைகளில் வாழும் மலையாடுகள், காட்டெருமைகள், மான் மற்றும் அபூர்வ வகை குரங்குகள் ஆகியவை தற்போது வயல் வெளிகளிலும் வீட்டருகிலும் சுற்றித் திரிவது வாடிக்கையாக மாறிவிட்டது.

இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களில் மட்டுமே சாலைகளை கடக்க முயன்று இறந்த மான்களின் எண்ணிக்கை 3, மேலும் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் வெளிநாட்டுப் பயணிகளையும் கவர்ந்திழுக்கும் சுற்றுலா தளமான கொடைக்கானலில் பேருந்து நிலையத்தில் வந்த காட்டெருமை ஒன்று அங்கு இருந்த சுற்றுலா பயணிகளைப் பயமுறுத்தியதோடு, ஒரு சிலரை விரட்டியும் சென்றது. இது குறித்து பேசிய வியாபாரி சரவணன், இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

சமீப காலமாகத்தான் இது போன்ற காட்டெருமைகள் ஆள் நடமாட்டம் உள்ள இடங்களில் சுற்றித்திரிகின்றன எனத் தெரிவித்தார். காட்டெருமைகள் இயற்கையாக வனப்பகுதிகளில் தீவனம் இல்லாவிட்டாலோ, நீர் இல்லாவிட்டாலோ தான் வனத்தை விட்டு வெளிவரும் அதுவும் மனித நடமாட்டம் உள்ள இடத்தில் காட்டெருமைகள் வருவது அபூர்வம்.

ஆனால் தற்போது கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் சர்வ சாதாரணமாகக் காட்டெருமைகள் மேய்ந்து வருவதைக் காணமுடிகிறது எனத் தெரிவித்த வனவிலங்கு ஆர்வலர் பிரபு குமார், இதற்குக் காரணம் கொடைக்கானல் முழுவதும் தற்போது ரியல்எஸ்டேட் தொழில் சிறப்பாக நடைபெறுவது மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகளை வரவேற்று உபசரிக்கும் பெரிய மற்றும் சிறிய உணவு விடுதிகள் அவற்றில் உருவாகும் உணவு கழிவு மற்றும் வாழை இலை ஆகியவற்றை அதற்கு உரிய இடத்தில் கொட்டுவதற்கு பதில் தெருவிலோ, அல்லது ஏதாவது எஸ்டேட் ஓரங்களிலோ கொட்டிவிடுகின்றனர்.

அவற்றை உண்டு பழகிய காட்டெருமைகள் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் போதிய உணவு கிடைப்பதால் சாலைகளுக்கும் உணவு விடுதிகள் அதிகளவு இருக்கும் பகுதிகளுக்கும் வருகின்றன. மேலும் இதனால் மனிதர்களுக்கும் காட்டெருமைகளுக்குமான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இரவில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு ஒரே தீர்வு உணவு விடுதிகள் உணவு மீதங்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இல்லையெனில் காட்டெருமைகள் அனைத்தும் இன்னும் சில காலத்தில் வீட்டெருமை போல மாறிவிடும் எனவும் பின்னர் சிறிது சிறிதாக இனமே அழியும் அவலம் ஏற்படும் எனவும் கவலை தெரிவித்தார்.

மேலும் படிக்க