• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரே பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் – பி.சி.சாக்கோ

December 20, 2018 தண்டோரா குழு

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் முன்மொழிந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரே பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் என அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பி.சி.சாக்கோ தெரிவித்துள்ளார்.

கோவை ரயில்நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர்
பி.சி.சாக்கோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

ரபேல் விமானங்களை வாங்குவது தொடர்பாக விமானப்படை தலைவரின் கருத்து அவர் முழுமையான தகவலை அறியாததை காட்டுகிறது. ரபேல் போர் விமானம் வாங்கியதில் நாட்டிற்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற கூட்டு கமிட்டி விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும் என்பது தான் காங்கிரசின் நிலைப்பாடு. உச்சநீதிமன்றமத்தின் தீர்ப்பு தவறான தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அரசு தவறான தகவல்களை வழங்கி உச்சநீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளது. மோடி சிறந்த பேச்சாளர் என்பதால் பேசி சமாளிக்கலாம், ஆனால் உண்மையில் நாட்டில் வளர்ச்சியை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி ஆட்சிதான் என்றார்.

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஸ்டாலின் முன் மொழிந்தது தொடர்பான கேள்விக்கு, பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரே காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் எனவும், மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதே காங்கிரசின் இலக்கு எனவும் சாக்கோ தெரிவித்தார்.

மேலும் படிக்க