December 17, 2018
தண்டோரா குழு
2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்படும் என்று அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக சார்பில் மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்படும். எங்களுக்கு காங்கிரஸ் – திமுக கூட்டணி குறித்து பயம் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் அறிவித்தவுடன் நாங்கள் மெகா கூட்டணியை உருவாக்குவோம். இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் உள்ளார். அவர் இதற்காக வியூகம் வகுத்து வருகிறார். விரைவில் கூட்டணி குறித்து முடிவாகும். அதன்பின் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்போம் என கூறியுள்ளார்.