• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளேன் – பிரகாஷ் ராஜ் அறிவிப்பு

January 1, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் பிரகாஷ் ராஜ். இதற்கிடையில், இவரின் சிறுவயது தோழியான கர்நாடகாவின் முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர் கவுரி லங்கேஸ் இந்து அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.

அதன் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து அரசியல் கருத்துக்கள் பேச ஆரம்பித்தார். குறிப்பாக அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரகாஷ் ராஜ் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய ஒரு தொடக்கம் கூடுதல் பொறுப்பு, உங்கள் அனைவரது ஆதரவோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட உள்ளேன்.எந்த தொகுதி என்பதை விரைவில் அறிவிக்கிறேன். உங்கள் முன்னாள் இருப்பது மக்களாட்சி என பதிவிட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து அவர் போட்டியிடவே அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும் படிக்க