• Download mobile app
13 Jun 2025, FridayEdition - 3411
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு – பாரிவேந்தர்

March 2, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில்,இந்திய ஜனநாயகக் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாகவும், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர்,

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கப்படும் என இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் நடைபெற்ற அவசர பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் இருக்கும் சூழலில், பெரும் மாற்றம் தேவை அது ஸ்டாலின் மூலம் தான் ஏற்படும். பாஜக கூட்டணியில் தொடர்ந்து தொல்லை அளித்து வந்த பாமகவும், இருப்பதால் அக்கூட்டணியில் நீடிக்கவில்லை என பாரிவேந்தர் குறிப்பிட்டார். மேலும், கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து தற்போது எதுவும் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க