• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாங்க எப்பாவுமே வில்லேஜ் விஞ்ஞானிகள் தான்..

March 3, 2016 வெங்கி சதீஷ்

உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு கண்டுபிடிப்புகள் இருந்தாலும் அதைக் கண்டுபிடித்த அறிவியல் விஞ்ஞானிகள் ஒரு சில விசயங்களில் கோட்டைவிட்டதை நாம் கேள்விப்பட்டுள்ளோம். பெரிய பூனைக்கு பெரிய ஓட்டை, சிறிய பூனைக்குச் சிறிய ஓட்டைப் போட்டவர்களும் உள்ளனர்.

மேலும் பறவைகள் புழு பூச்சியை உண்பதால்தான் பறக்கிறது என நினைத்து வீட்டு வேலைக்காரிக்குப் புழு பூச்சியை உண்ணக்கொடுத்தவர் தான் பின்னாளில் மிகப்பெரிய விஞ்ஞானியாக வந்துள்ளார். இது போன்ற செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதில் இருந்த கருத்துக்களும் அந்தச் செயல்களில் அவர்களுக்கு இருந்த ஈடுபாடும் பிரமிக்க வைக்கிறது.

இதே போல் நம்ம ஊரிலும் பல விஞ்ஞானிகள் உள்ளனர். ஒரு சிறிய வேலையைக் கூட மூளையைக் கசக்கி அதை மிகப்பெரிய சாதனையை செய்வதைப்போலச் செய்து வெற்றிபெறுபவர்கள் தான் வில்லேஜ் விஞ்ஞானிகள். அவர்களைப்பற்றிப் பார்ப்போம்.

ஒரு குடிநீர் குழாயில் இருந்து தடுப்பை உடைக்காமல் நீரை எப்படிப் பிடிக்க முடியும் எனக் கண்டுபிடித்தவர் நம்ம வில்லேஜ் விஞ்ஞானி.

உடைத்த ஒரு கடிகாரத்தை மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதைக் கண்டுபிடித்து காசை மிச்சப்படுத்தியதுடன், அதை ஒரு டிஸைன் போல வடிவமைத்தவரும் ஒரு வில்லேஜ் விஞ்ஞானிதான்.

பிரம்மச்சாரி வாழ்கையில் அடுப்பை வைத்துப் பிழைப்பு நடத்த முடியாமல் ஐயர்ன் பாக்ஸை வைத்து பால் சூடு செய்து குடிக்கும் அறிவாளி கூட ஒரு வில்லேஜ் விஞ்ஞானி தான்.

மேலும் படிக்க