• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நவக்கரையில் GRG மேலாண்மை கல்லூரி, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் சமூக சேவை நிகழ்ச்சி

September 27, 2022 தண்டோரா குழு

GRG மேலாண்மை கல்லூரி, கோயம்புத்தூர், நவக்கரை பஞ்சாயத்தில், அதன் முதல் சமூக சேவை திட்டத்தை 24 செப்டம்பர் 2022 அன்று துவங்கியது. நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக Cognizent அறக்கட்டளையின் இந்தியத் தலைவர் பாலகுமார் தங்கவேலு கலந்து கொண்டார்.

தொடக்க நிகழ்வில் GRG மேலாண்மை கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், நவக்கரை கிராம மக்கள், ‘நம்ம நவக்கரை’ NGO உறுப்பினர்கள் மற்றும் இதர NGO’s கலந்து கொண்டனர். டாக்டர் பி. சதாசிவம்,இயக்குநர், ஜிஆர்ஜிஎஸ்எம்எஸ்,பேராசிரியர் எஸ். பாலசுப்ரமணியன்,இயக்குநர், ஜிஆர்ஜிசிஏஎஸ்,என் எஸ் மகேஷ்வரன், தலைவர்,நம்ம நவக்கரை,கோமதி செந்தில் குமார், பஞ்சாயத்து தலைவர், மாவுத்தம்பதி, டாக்டர் சவிதா நாயர்,டீன்,ஜிஆர்ஜிஎஸ்எம்எஸ் , ஆர் இனிதா ரீனா, திட்டம ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

சமூக சேவை நிகழ்ச்சி திட்டத்தில்,GRG மேலாண்மை கல்லூரி மாணவிகள் கிராமத்தில் மாற்றங்களைக் கொண்டுவர பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சமூக திட்டங்களைச் செயல்படுத்துவர். வனம் மேம்பாட்டுத் திட்டம், நீர்நிலை மேலாண்மை, வேளாண்மை மேம்பாடு, கழிவு மேலாண்மை, சுயஉதவிக்குழு மேம்பாடு மற்றும் பழங்குடிப் பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாடு ஆகிய 6 திட்டங்கள் மாணவிகளால் மேற்கொள்ளப்படும். மாணவ திட்டக் குழுக்கள் கிராமங்கள், விவசாய நிலங்கள் , நீர்நிலைகள், காடு வளர்ப்பு பகுதி – வனம் ,மற்றும் அரசு பழங்குடியினர் பள்ளி ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

மேலும் படிக்க