• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நண்பர் வீட்டில் ரூ.3 லட்சம் திருடிய சாமியார் கைது

December 10, 2021 தண்டோரா குழு

கோவையில் நண்பர் வீட்டில் ரூ.3 லட்சம் திருடிய சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

கோவை நீலிகோனாம்பாளையம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் கவுதம்(39). திருமணமாகாதவர். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவர் அடிக்கடி விருதுநகரில் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலையில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். அப்போது அங்கு அவருக்கு சாமியார் ராஜேந்திரன்(எ) அன்பே சிவம்(45)பழக்கமானார். இருவரும் மிகவும் நட்பாக பழகி வந்தனர்.

அவர்களின் நட்பு நாளடைவில் சாமியார் ராஜேந்திரன் கோவைக்கு வந்தால் கவுதம் வீட்டில் தங்கி செல்லும் அளவுக்கு வளர்ந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் சாமியார் ராஜேந்திரன் கோவை வந்து கவுதம் வீட்டில் தங்கினார். அப்போது கவுதம் தனது வீட்டின் கீழ் போர்சனை போக்கியத்துக்கு விட்டு அதன்மூலம் கிடைத்த ரூ.3 லட்சத்தை வீட்டில் வைத்திருந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டில் ரூ.3 லட்சத்தை காணவில்லை. சாமியார் ராஜேந்திரனும் அங்கு இல்லை. அவர் பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கவுதம் அவரது செல்போனுக்கு தொடர்பு கொள்ளமுயற்சித்தார். ஆனால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து கவுதம் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். கோவையில் தலைமறைவாகியிருந்த சாமியார் ராஜேந்திரன்(எ) அன்பேசிவம் என்பவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க