• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு

August 2, 2019 தண்டோரா குழு

நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

விஷாலின் தயாரிப்பு நிறுவன ஊழியர்களிடம் பிடித்த டிடிஎஸ் வரி தொகையை முறையாக செலுத்தவில்லை என வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதனையடுத்து விரைவில் விஷால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவுகிறது.

அயோக்யா படத்தை தொடர்ந்து விஷால் சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருகிறார். வருகிற அக்டோபர் மாதம் அவருக்கு அனிஷா என்பவருடன் திருமணம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க