• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் ரஜினிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து

December 18, 2018 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்த் மீது சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2012ல் ரஜினிகாந்த் பெயரைச்சொல்லி பைனான்சியர் போத்ராவிடம் இயக்குநர் கஸ்தூரிராஜா 65 லட்சம் கடன் பெற்றதாகவும் கடன் தொகையை காசோலையாக திருப்பிக் கொடுத்தபோது வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு எதிரான பைனான்சியர் போத்ரா தொடர்ந்த செக் மோசடி வழக்கில், ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில் தன் பெயரை தவறாக பயன்படுத்தி போத்ரா பணம் பறிக்க முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனால்,ரஜினிகாந்த் மீது ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ரஜினிக்கு எதிராக போத்ரா ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் கஸ்தூரிராஜாவுக்கு எதிராகதான் வழக்கு தொடர்ந்ததாகவும், ரஜினிகாந்த் தனக்கு எதிராக தவறான தகவல்களை கூறுவதாகவும் போத்ரா தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவதூறு வழக்கில் வரும் ஜூன் 6ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் ரஜினி காந்த்துக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில் தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க