• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் மன்சூர் அலிகானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

June 27, 2018 தண்டோரா குழு

நடிகர் மன்சூர் அலிகானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.சேலம் – சென்னை இடையேயான எட்டுவழிச்சாலை திட்டம் குறித்து வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகானை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் கடந்த 17ம் தேதி கைது செய்தனர்.

பின்னர் சேலம் அழைத்து வரப்பட்ட அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதையடுத்து, நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் கேட்டு ஓமலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.கடந்த 22ம் தேதி இவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.இந்நிலையில், இன்று நடிகர் மன்சூர் அலிகானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

மேலும் படிக்க