• Download mobile app
30 Oct 2025, ThursdayEdition - 3550
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் திலீப்புக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

July 24, 2017 தண்டோரா குழு

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் மீண்டும் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

பிப்ரவரி 17-ம் தேதி பிரபல கேரள நடிகையை ஒரு கும்பல் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது. இதுதொடர்பாக நடிகர் திலீப், பல்சர் சுனில் உட்பட 6 பேரை கேரளா போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் நடிகர் திலீப் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணையில் “நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்” என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதித்திட்டார்.

இதனால் நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் மீண்டும் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.எனினும் நடிகர் திலீப், கேரள நீதிமன்றத்தில் தொடர்ந்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க