June 10, 2019
தண்டோரா குழு
பிரபல நாடக நடிகரும், தமிழ் சினிமா வசன கர்த்தாவுமான கிரேசி மோகன் உடல்நலக்குறைவால் காலமானார்.
1979-ல் கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற நாடக குழுவை தொடங்கி பல காமெடி நாடகங்களை அரங்கேற்றினார்.
டைமிங் காமெடி வசனங்களை எழுதுவதில் கைதேர்ந்தவர், கிரேஸி மோகன். இவர் முதன் முதலில் பாலசந்தர் இயக்கிய ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்துக்கு வசனம் எழுதினார்.பின்னர் கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார். வசனகர்த்தாவாகப் பணியாற்றிய அதே சமயம் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தோன்றியிருக்கிறார்.
இந்நிலையில்,இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு ‘கிரேசி’ மோகன் காவேரி மருத்துவமனையில் அனுமதி. கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று மதியம்2 மணியளவில் அவர் உயிரிழந்தார்.