June 1, 2018 தண்டோரா குழு
நடிகர் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகரும்,பா.ஜ.க.பிரமுகருமான எஸ்.வி.சேகா் பெண் பத்திரிக்கையாளா்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமான வகையில் தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.இவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடா்ந்து தனது பதிவை அவா் நீக்கிவிட்டார்.
இதனையடுத்து நடிகர் எஸ்.வி.சேகர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவரை கைது செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும்,விசாரணை நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதோடு,எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.