• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நகர்ப்புற கற்றல் வேலைவாய்ப்பு திட்டம் புதிய பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

February 22, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் நகர்ப்புற கற்றல் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் புதிய பட்டதாரிகள் பணி புரியும் வகையில் ஓர் அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அலுவல் அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவற்றுக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறியிருப்பதாவது:

விண்ணப்பதாரர்கள் கடந்த 18 மாதங்களுக்குள் பட்டப்படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு பயிற்சிக்கான கால அவகாசம் அதிக பட்சம் ஒரு வருடம். வரும் 28ம் தேதிக்குL http://internship.aicte-india.org இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மொத்தம் 42 பணியிடங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க