• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தோனியின் ஓய்வு குறித்து யாரும் பேசக்கூடாது – பத்ரிநாத்

July 22, 2019 தண்டோரா குழு

தோனியின் ஓய்வு குறித்து யாரும் பேசக்கூடாது. முடிவை எடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உள்ளது என கிரிக்கெட் வீரர்
பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்,

இந்திய கிரிக்கெட் அணி வலுவாக இருந்த போதிலும் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் இந்திய அணி வெளியேறியது அனைவரிடையேயும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பேட்டிங்கில் மிடில் ஆடர் வரிசையில் சரியான தேர்வு இல்லாதது தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதன் வெளிப்பாடு என்பது மக்களின் எதிர்பார்ப்பு நிறைந்த போட்டியில் தெரியவந்தது. தோனியின் ஓய்வு குறித்து யாரும் பேசக்கூடாது. முடிவை எடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உள்ளது. இந்திய அணிக்காக நிறைய போட்டிகளை வெற்றியை வசமாக்கியவர் தோனி.தோனியின் ஓய்வு குறித்து தேர்வு குழுவின் தலைமை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் விக்கெட் கீப்பருக்கான அடுத்த வீரராக ரிஷப் பந்த்க்கு அதிகமான வாய்புகள் கொடுக்கபடுவது இளம் வீரர்களை அணியில் வரவேற்கும் விதமாக உள்ளது.

உலக கோப்பை அணி தேர்வு அனைத்து மட்டத்திலும் விமர்சனம் செய்யப்பட்டது உண்மை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடி காரணமாகவே இருக்கிறது. இந்திய அணிக்கான கேப்டன் மாற்றம் தற்போதைக்கு தேவையில்லை என்றும் கோலி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். தமிழகம் மற்றும் இந்திய அளவில் வீரர்கள் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லாமலே நடைபெற்று வருகிறது. திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க